திங்கள், 13 ஜனவரி, 2014

ஆட்டோகிராப்

இது சற்று நீளமான பதிவு....படித்த முடித்த உடன் நீங்களும் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.

நம் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வில், நாம் அறிந்து கொண்ட விஷயம்...நாம் பார்த்து ரசித்தது...நம் மனதில் தோன்றும் சிந்தனைகள் போன்று பலவற்றை நம்முடைய மன பெட்டகத்தில் பூட்டி நியாபக படுத்தி கொள்ள முடியாது. அப்படியே நியாபக படுத்தினாலும் சில நாட்கள் கழித்து அந்த நினைவுகள் மறக்கடிக்க பட்டிருக்கும். திரும்ப மீட்டெடுப்பது கடினம். அந்த நினைவுகள்...மனதில் தோன்றும் சிந்தனைகள் மறக்காமலிருக்க குறிப்புகளாக எழுதி வைத்து கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பி பார்க்கலாம். "எழுதாத கணக்கு அழுதாலும் தீராது" என்று கிராம புறத்தில் சொல்வார்கள். அந்த வகையில் எனது மனதில் தோன்றிய விஷயங்களை கிறுக்கல்களாக எழுதி வருகிறேன். 

எண்ணத்தில் தோன்றியதை ஏட்டில் எழுத ஆரம்பியுங்கள். எதை பற்றி எழுதுவது என்று யோசிக்க வேண்டாம். The "funny thing you write" is better than the "best thing you did not write". நமது அன்றாட வாழ்வில் நடக்கும் விசயங்களிலே நிறைய நகைசுவை இருக்கும். மற்றும் நீங்கள் ரசித்த காட்சிகள், அரசியல், ஆன்மீகம், பகுத்தறிவு, சமுக பிரச்சனைகள், மொழி, கலாச்சாரம், இயற்கை போன்றவற்றை பற்றி உங்கள் மனதில் தோன்றுவதை எழுதலாம். நீங்கள் இந்த மாதிரி எழுதும் விஷயங்கள் ஏற்கனவே விவாதிக்க பட்டது...இதில் புதுசா நாம் என்ன சொல்லிவிட போகிறோம் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் தனி தனி பெர்ஷேப்சன் (perception) இருக்கும்....நீங்களும் உங்கள் மனதில் தோன்றிய தனித்துவமான உங்களின் பார்வையை பதிவு செய்யலாம். 

பொதுவாக எழுத்துலகில் அனைவரும் தருமி தான். கடவுள் எழுதி கொடுத்த பாட்டை தான் பாடி கொண்டிருக்கின்றனர். (எழுத்தறிவித்தவன் இறைவன்). எவரும் புதியதாக பாடவில்லை. என்ன கொஞ்சம் பொருள் புரிந்து பாட வேண்டும். அரிவை கூந்தலை நாடி சென்ற அஞ்சிறை தும்பி-யிடம் (கொங்குதேர் வாழ்க்கை) சிவ பெருமான் வினவியதின் பொருள் தெரிய வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்துலகில் பாட்டு பாடி பேர் வாங்கிய எழுத்தாளர்களை விட...பாட்டில் குற்றம் கண்டுபிடிக்கும் புலவர்கள் (நக்கீரர்கள்) தான் அதிகம். அதலால் நீங்க சொல்ல வரும் கருத்தின் பொருளை புரிந்து எழுத வேண்டும். 

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முன்பே எல்லா சூழ்நிலைகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். அந்த இலக்கினை தாண்டி யாரும் எழுதி விட முடியாது. இருந்தாலும் அதற்கடுத்து வந்த கவிஞர்கள் எல்லாம் அதே சூழல்களில் ஆனால் தங்களின் தனி பாணியில் எழுதுகின்றனர். அது போல உங்களுக்கும் சில விசயங்களில் உங்களின் "அறியும் திறன்" மற்றும் உங்களின் "சமுக பார்வை" மற்றவரிடம் இருந்து வேறு பட்டு இருக்கலாம். அதை கடை பிடித்து எழுதலாம். நீங்கள் செய்யும் செயல்களே உங்களுக்கு முகவரியாக இருக்கும்.

அடுத்து எழுதிய உடனே உங்களுக்கு சரியான அங்கீகராம் கிடைக்காது. உண்மையை எடுத்துரைத்த கலிலியோ-வை முட்டாள் என்று தான் ஆரம்பத்தில் சொன்னார்கள். ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பள்ளி விழாவிற்கு கவிதை சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அப்பொழுது ஒரு மாணவன் எழுதிய கவிதையை கண்ணதாசன் வாசித்து காட்டினார். அங்கே பலத்த கரகோஷம் எழுந்தது. பிறகு தான் எழுதிய கவிதையை அதே மாணவனிடம் சொல்லி வாசிக்க சொன்னார். அந்த மாணவன் கவிஞரின் கவிதையை வாசித்த பிறகு...கேட்டு கொண்டிருந்த பார்வையாளர்கள் அமைதியாக இருந்தனர். அதன் பிறகு கவிஞர் எழுந்து உண்மையை சொன்னார்....தான் வாசித்த கவிதை மான்வனுடையது அதற்கு பாராட்டு கிடைத்தது, ஆனால் அந்த மாணவன் வாசித்த கவிதை என்னுடையது அதற்கு பாராட்டு கிடைக்க வில்லை. இங்கு எல்லோரும் யார் பேசுகிறார் என்று தான் கவனிக்கிறது அவர் என்ன பேசுகிறார் என்று கண்டு கொள்வதில்லை.


அது போல எதையும் கண்டு கொள்ளாமல் எழுதி கொண்டிருங்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு நாளில் நீங்கள் கவனிக்க படுவீர்கள். முதலில் நான் முக நூலில் எழுத ஆரம்பித்தேன், நாலு அஞ்சு லைக் கிடைக்கும். மற்றவர்களின் மொக்கையான ஸ்டேட்டஸ் மற்றும் ஷேரிங்-க்கு கிடைக்கும் லைக் கூட எனக்கு கிடைக்காதது கொஞ்ச பீலிங்கா இருக்கும். அதன் பிறகு நான் கூகுள் வலைதளத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இன்று எனது வலைத்தளம் நமது தமிழ் மக்களால் உலகின் பல நாடுகளிலிருந்து பார்வையிட பட்டுள்ளது என நினைக்கும் போது சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது (As per Blogger audience views)

முக நூலில் உங்களுக்கு நூற்று கணக்கான நண்பர்கள் இருப்பார்கள்..அவர்கள் போடும் ஸ்டேட்டஸ் மற்றும் ஷேரிங், பிறகு நீங்கள் லைக் செய்திருந்த பக்கங்களில் இருந்து வரும் தகவல்கள், நீங்கள் ஃபாலோ பண்ணும் நபர்களின் செய்திகள், ஃபேவரைட் பேஜஸ் மற்றும் நீங்கள் சேர்ந்துள்ள குருப் மெசேஜ்-கள் என்று ஒரு மணி நேரத்துக்குள் பத்திற்கும் மேற்பட்ட போஸ்ட் பார்க்க வேண்டியது இருக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து தடவையாது பேஸ் புக் வந்தால் தான் எல்லா போஸ்டும் படிக்க முடியும், இல்லையெனில் நீங்கள் பார்க்க வேண்டியவை சுருக்க பட்டு விடுகிறது. பேஸ் புக் நிறுவனம் நடத்திய ஆய்வில்...60% நபர்கள் சாட்டிங் செய்ய தான் வருகிறார்கள். எனவே இந்த முக நூல் தளத்தில் நீங்கள் பொறுமையாக எந்த செய்தியையும் படிக்க இயலாது. மேலும் எந்த நேரத்திலும் உங்கள் முக நூல் கணக்கு முடக்க படலாம் அல்லது முக நூலே முடங்கி விடலாம் (சில நாடுகளில் தடை விதிக்க பட்டுள்ளது). அதற்கு பதிலாக உங்களுக்கு எழுதுவதில் ஆர்வமிருந்தால்...கூகுள் வலைத்தளம் ஆரம்பித்து எழுதலாம். இங்கு வந்து நீங்கள் படிப்பது ஒரு நூலகத்தில் படிப்பது போன்ற உணர்வை தரும்.

நீங்கள் எழுதுவதாக இருந்தால் தமிழ் மொழியிலே எழுத ஆரம்பியுங்கள். ஏனெனில் பயன் பாட்டில் இல்லாத ஹீப்ரு, பாரசீக மொழிகள் போன்று இன்று உள்ள ஆங்கில மோகத்தால் தமிழ் மொழியும் தொலைந்து விடலாம். இப்பொழுது எல்லா தகவல் பரிமாற்றங்கள் இணையத்தின் வழி நடகின்றது மற்றும் உலக மக்கள் அனைனவரும் இணையத்தினை பயன்படுத்துகின்றனர். ஆதலால், நமது மொழி அழிந்து விடாமல் வளர்க்க இணையத்தினை பயன் படுத்தலாம். (இந்திய பிராந்திய மொழிகளில் இணையத்தில் அதிகமாக தமிழ் பயன்படுத்த படுகிறது). அதற்காக ஆங்கிலம் தேவையில்லை என்று சொல்ல வரவில்லை. நமக்கு தேவையான் இடங்களில் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பிற்கு ஆங்கிலம் பயன்படுத்துங்கள்.

நான் "மறதி" என்ற தலைப்பில் முதல் பதிவினை முக நூலில் சற்று வேடிக்கையாக எழுதினேன். பிறகு என்னவென்று தெரியவில்லை...எழுதுவதில் ஒரு ஆர்வம் ஏற்பட்டு எழுதி கொண்டு இருக்கிறேன். ஒரு செயலை ஆரம்பிப்பது பெரிய விஷயம் இல்லை...அந்த செயலுக்கு முற்று புள்ளி வைக்காமல் தொடர்ந்து செய்வது சற்று கடினமான விஷயம். பொதுவாக வர்த்தகத்தில் டிசம்பர் மாதம் ஆப் சீசனாக இருக்கும்...அலுவலகத்தில் ஓய்வு கிடைக்கும் (அன் தே நெட்...ஆப் தே வொர்க்) இணையத்தில் கொஞ்ச பதிவுகள் எழுதினேன். தற்போது ஜனவரி பிறந்து விட்டதால் வேலை கொஞ்சம் பிஸியாகி விடும். நிலைமை வைஸ் வெர்சா தான் (ஆப் தே நெட்...அன் தே வொர்க்). இருந்தாலும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எழுதி கொண்டிருக்கிறேன். அரசியல் சமுக பிரச்சனை பற்றி எழுதினால்....ரெம்ப போர் அடித்து விடும். அதனால் நினைத்தாலே இனிக்கும் மற்றும் நையாண்டி என்று சில பதிவுகளை தொடர்களாக எழுதி வருகிறேன். 

மேலும் தங்கலிஸ் என்ற தலைப்பில் தமிழ் வழியாக ஆங்கிலம் தெரிந்து கொள்வது பற்றி எழுதலாம் என்று ஒரு ஆவல். நான் ஆங்கிலத்தில் கொஞ்ச அரை குறை தான். ஒரு முறை நான் பணி புரியும் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது என்னுடைய இயக்குனரிடம்....ஏற்றுமதி செய்த ரிப்போட்டை காண்பித்து நின்று கொண்டிருந்தேன். அந்த ரிப்போட்டில் தவறு இருப்பதை கண்டுபிடித்து.....ஷிட் (shit) என்று ஆங்கிலத்தில் கூற உடனே நான், சிட் (sit) என்று சொல்லி நம்மை உக்கார தான் சொல்கிறார் என்று அவர் முன்னே உக்கார்ந்து விட்டேன். பிறகு கோபமா பார்த்து முறைச்சுட்டாறு. இப்படி இங்கிலீஷ் புரியாமல் நிறைய இடத்தில பல்பு வாங்கி இருக்கேன். பத்தாம் கிளாஸ் படிக்கும் போது....ஜாக்டவ் (திருட்டு காகம்) என்ற எஸ்ஸே மற்றும் லோட்டஸ் என்ற மெமோரி போயம் மட்டும் தெரிஞ்சு வசுகிட்டு இங்கிலீஷ்-ல பாஸ் பண்ணியாச்சு. பிறகு பாலிடெக்னிக் படிச்சு வேலைக்கு வந்த இடத்துல தான் மத்தவங்க பேசுறது வச்சு...கொஞ்ச கொஞ்சமாக தெரிஞ்சுகிட்டேன். இன்னும் சரியா பிரிப்போசிஷன் (இன், அட், பை) பயன் படுத்துறதுன்னு தெரியாது. பொதுவா நமது நண்பர்களுக்கு ஆங்கிலம் சொல்லி தர வேண்டியதில்லை என்றாலும்...என்னைய மாதிரி இருக்கும் பசங்களுக்கு கொஞ்ச சொல்லி தரலாம் என்ற சிறு முயற்சி...நானும் கற்று கொண்டு எழுதிகிறேன். (என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் - பிற்குறிப்பு கொசுறு II படிக்கவும்)

இன்னொரு விஷயம், பொதுவா இப்படி சமூக வலைதளங்களில் எழுதுறவங்களை....வேலையில்லாத ஆளுங்க என்று சில பேர் நினைப்பதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு தெரிஞ்சு எழுதுறவங்க அனைவரும் பிஸியான பெர்சன்ஸ் தான். கொஞ்ச பேஸ் புக், டிவிட்டர் பக்கம் தேடி பாருங்க....நம்ம மோடி, கேஜ்ரிவால், அருண் ஜெட்லி போன்ற அரசியல் வாதிகளும், கலை, மருத்துவ துறை மற்றும் உயர் அரசாங்க பதவியில் இருப்பவர்கள் பல பேர் எழுதி கொண்டு தான் இருக்கின்றனர். அட..நம்ம கலைஞரை கூட பாருங்க, ஆளு வச்சு கூட டெய்லி பேஸ் புக்-ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாரு. (காங்கிரஸ் கூட்டனியிலிருந்து வெளியேறிய தி.மு.க-வை பார்த்து EVKS இளங்கோவன் சொன்னாரு...."காங்கிரசை பிடித்த சனி வெளியேறி விட்டது" என்று, அதற்கு முரசொலியில் கலைஞர் எழுதினாராம் "என்னது...காங்கிரசை விட்டு இளங்கோவன் வெளியேறி விட்டாரா என்று). இவ்வாறு எல்லா பிரபலங்களும் எழுதி கொண்டு தான் இருக்கின்றனர். 

எனவே...நீங்களும் கொஞ்ச நேரம் கிடைக்கும் போது எழுத ஆரம்பிங்க...வாழ்த்துக்கள். 

பதிவின் நீளம் அதிகமாகிடுச்சு...மன்னிக்கவும் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.

எஸ். ரெங்க ராஜன். 

கொசுறு I: திருவிளையாடல் பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணமிருக்கிறதா இல்லையா என்பதற்கு மேலே சொன்ன கொங்குதேர் வாழ்க்கை பாடலை சிவ பெருமான் எழுதி தருமிடம் தருவார். அந்த பாடலில்...பெண்களின் கூந்தலை பற்றி குறிப்பிடும் போது "அரிவை கூந்தல்" என்று சொல்லிருப்பார். "அரிவை" என்பது...பெண்ணின் ஐந்தாவது பருவம் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்)...ஆகவே "அரிவை" பருவம் என்றால்..நாற்பது வயது பெண்ணை குறிக்கும் என நினைக்கிறேன். அப்படியென்றால்...அதற்கு முந்தைய பருவ பொண்ணுங்க கூந்தலுக்கு மனமில்லை என்று தானே பொருள் படுகிறது. அது எனக்கு சரியா தெரியல.....பொதுவா பொண்ணுங்க கூந்தலில் மணமிருக்கா இல்ல ஈறு பேணு இருக்கானு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்...ஆண் என்றாலும் சரி....பெண் என்றாலும் சரி, ஒருவரின் உண்மையான உச்சகட்ட அழகு வெளிபடுவது நாற்பது வயதில் தான். நம்ம நடிகர் விஜயை பாருங்கள் தெரியும். அப்ப இருக்கும் நாளைய தீர்ப்பு படத்தில் பார்ப்பதற்கும்...இப்ப இருக்கும் படத்தில் வருவதற்கும். விஜய் மட்டுமல்ல...அஜித், கமல், அர்ஜுன போன்ற நடிகரும் நாற்பது வயதில் தான் வசீகரமாக தெரிவார். உங்க அம்மா அப்பா கல்யாண போட்டவையும்...அடுத்து நாற்பது வயசு போட்டவையும் பாருங்க தெரியும். ஏனெனில் அந்த பருவம் தான்..ஓடி ஓடி உழைத்து, பிரச்சனைகளை எதிர் கொண்டு, பல அனுபவங்களை பெற்று முதிர்ச்சி அடைந்த பருவம். அதற்கடுத்து ஒய்வு வந்து விட்டால்..பழைய முக பொலிவு போய் விடும். உழைத்து கொண்டே இருங்கள்...அழகாக தெரிவீர்கள்

கொசுறு II: இந்த ஆங்கிலத்தில் அடிப்படையா "ஆர்ட்டிகிள்" என்ற பயிற்சி இருக்கும். அதாவது....ஆங்கில வவ்வல்ஸ் (ஆங்கில உயிரெழுத்து - a, e, i, o, u) முன்னே "an" போட வேண்டும். இதன் படி...Unmberla & University - இரண்டுமே "U" ல ஆரம்பிக்கும் சொற்கள். ஆனால் Umberla என்ற சொல்லுக்கு "an" போடுகிறோம் ஆனால் University என்று சொல்லுக்கு "a" போடுகிறோம். அது போல முரணாக...hour என்று "h" ல ஆரம்பிக்கும் சொல்லுக்கு "an" போடுகிறோம்.....இதற்கு காரணம் என்ன வென்று தெர்யுமா....எல்லாம் தமிழ் மொழி தான் காரணம். தமிழ் உயிரெழுத்து ("அ" முதல் "ஔ" வரை) ஓசையை கொண்டு ஒலிக்கும் ஆங்கில சொல்லுக்கு "an" போட வேண்டும். உதாரனமாக ""லிபென்ட் (elephant) என்ற சொல்லுக்கு "an" போடணும். மறுபடியும் மேலே சொன்ன சொற்களை  பாருங்கள்....""ம்பர்லா ("அ" உயிரெழுத்து an போடுகிறோம்), "யுனிவர்சிட்டி" (யு - உயிர் மெய் எழுத்து - an போடவில்லை, a போடுகிறோம்), இதே போல....Hour என்ற சொல்லில் ""வர் ("அ" உயிரெழுத்து an போடுகிறோம்). தெரிஞ்சுகோங்க இங்கிலீஸ் காரனே நம்ம மொழிய பயன்படுத்தி தான் டெவலப் பண்றான். இனிமேலாட்சும் ட்யுட், வன்னா, கொன்னா, வாட்ஸ் அப், ஆசாம் என்று பீட்டர் விடாதீங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக