வெள்ளி, 10 ஜனவரி, 2014

அம்புலி (அம்பு + புலி )


வில்லின் இருபுறமும் கட்ட பட்ட நாணில் அம்பினை ஏற்றி...பின்னோக்கி இழுக்கும் பொழுது அம்பு முன்னோக்கி சென்று இலக்கை அடைகிறது. சாதாரண நிலையில் பின்னோக்கி இழுக்காமல் அம்பினை எய்ய முடியாது. அம்பினை பின்னால் இழுத்தால் தான் அது முன்னோக்கி செல்லும். அது போல தான் வாழ்வில் சில அவமானங்கள் மற்றும் தோல்விகளால் நம்மை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. நீங்கள் பின்னோக்கி செல்வதால் துவண்டு விடாதீர்கள்.....அந்த "இக்கட்டான தருணங்கள்" தான் உங்களை அம்பினை போல முன்னோக்கி செல்வதற்கான உந்து சக்தியை தருகிறது.

இந்த சூழ்நிலையை தெளிவாக எடுத்துரைக்க சில திரை படங்களை நியாபக படுத்தலாம். தன் வீடு வாசல் எல்லாவற்றையும் இழந்து...நண்பனால் அவமான பட்ட அண்ணாமலையும், குடும்பத்தினர் செய்த துரோகத்தினால்...வீட்டை விட்டு வெளியேறும் படையப்பனும், அதிகார பலத்தால் தனது முயற்சிகளில் தோற்கடிக்க பட்டு கையில் ஒரு ரூபாயுடன் தெருவில் நிற்கும் சிவாஜியும்....இறுதியில் எல்லா சவால்களிலும் ஜெயித்து, முன்னேற்றம் அடைந்து வெற்றி கொடி கட்டுவதாக படத்தில் இருக்கும்.

இவை எல்லாம் சினிமா தான் ஆனால் நடை முறையில் சாத்தியமென்பது சற்று கடினமான விஷயம். இருந்தாலும் நாம் தெரிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால்...வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நாயகன், சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் முன்னேறி சென்று தனது லட்சியத்தை அடைகிறான். நாயகன் வெற்றி பெருவதற்கான உத்வேகத்தை கொடுத்தது....அவரை பின்னுக்கு தள்ளிய தோல்விகளும் அவமானங்களும். அதாவது சுருக்கமாக சொல்வேதேன்றல் அவமானங்கள் இல்லாமல் வெகுமானங்கள் இல்லை, தோல்விகள் இல்லாமல் சரித்திரங்கள் இல்லை.

இந்த அம்பினை போல புலியும் பின்னால் பதுங்குவது பாய்வதற்கு தான். அதே போல பல பிரச்சனைகளால் வீழ்ந்து விடும் போது....மனதில் வையுங்கள் இந்த வீழ்ச்சி என்பது ஒரு நல்ல எழுச்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் என்று. சில சோதனைகள் தான்....சாதனையின் பிறப்பிடங்களாக அமைகிறது.

கொசுறு: இந்த "அம்புலி" பதிவினை எழுதும் போது...இந்த வில்-அம்பு மற்றும் புலிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றியது. ஆமாம் இந்த இரண்டும் வெற்றி முரசு கொட்டிய நமது சேர சோழ மன்னர்களின் கொடியில் இடம் பெற்றுள்ள சின்னங்கள். வெற்றிக்கு வித்திட்ட அடையாளங்கள்.


- ரெங்க ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக