சனி, 4 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் (பகுதி 1)


== ஆகாயம் மண்ணிலா ==

முன்பு சனிகிழமை சாயுங்காலம் மதுரையிலிருந்து ஊருக்கு செல்ல பழங்காநத்தம் பேருந்து நிலையம் வர வேண்டும். மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பட்ட பிறகும், சில நாட்கள் பழங்காநத்தம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் இருந்தது. அப்பொழுது மாலை ஆறு மணிக்கு பழங்காநத்தம் வந்து ராஜாபாளையம் வரை செல்லும் "ஜெயவிலாஸ்" என்ற தனியார் பேருந்தில் எப்படியாவது ஏறி விடுவேன் (உக்கார சீட் இல்லாட்டினாலும்). இடையே எந்த தடங்கல் இருந்தாலும் மிகவும் சரியாக 1:30 மணி நேரத்துக்குள் ராஜாபாளையம் வந்து விடும். அந்த வண்டி டிரைவரகளுக்கு ரோடு எல்லாம் அத்து பிடி. ஒரு முறை அந்த பேருந்தில் பயணம் செய்யும் போது, திருமங்கலம் கழித்து, ஆலம்பட்டி தரைப்பாலம் (அத்வானியை கொல்ல பைப் வெடிகள் வைக்க பட்ட இடம்) மழை தண்ணீர் தேங்கி முட்டு அளவிற்கு இருந்தது, இரண்டு புறமும் எல்லா பேருந்துகளும் பாலத்திற்கு முன்னே இருந்தது. அப்பொழுது வந்த நம்ம பேருந்து பேருந்து டிரைவர் மட்டும் சாமர்த்தியமாக/துணிச்சலாக பாலத்தை கடந்து வந்தார்.

மேலும் இந்த ஜெயவிலாஸ் பேருந்தில் பயணிப்பதற்கு முக்கிய காரணம்...இளையராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டே பயணிக்கலாம். அந்த டிரைவர் சிட்டி லிமிட் திருப்பரகுன்றம் தாண்டிய பிறகு, பாடல்களை போட ஆரம்பித்து விடுவார். ராஜாவின் பாடல்கள் கேக்க ஆரம்பித்த உடன் தரை வழி பயணம்.....வான் வழி பயணமாகிவிடும் 

நன்றாக தெரியும், பேருந்தில் ஒலிபரப்பப்படும் முதல் பாடல் மௌனம் சம்மதம் படத்திலிருந்து "கல்யாண தேனிலா" என்ற பாடல். பிறகு புது புது அர்த்தங்கள் படத்திலிருந்து "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே", அப்படியே மௌன ராகம், இதய கோவில், கேளடி கண்மணி, வருஷம் 16 படங்களிலிருந்து பாடல்கள் செவிக்கு விருந்தாகும். "ராஜா"பாளையம் வரை ராஜாவின் இசையில் நனைந்து கொண்டே போகலாம். பிறகு வேறு பேருந்து மாறி எங்க ஊருக்கு செல்ல வேண்டும்.

பேருந்தில் ஒலிபரப்பப்பட்ட அந்த முதல் பாடல்.....ராஜாவின் இசையில் ஜேசுதாஸ் மற்றும் சித்ரா குரலில். மொட்டை மாடி இரவில் காய்ச்சாத பால் நிலவை பார்த்து கொண்டே இந்த பாடலை கேட்டு பாருங்கள். நீதானே வான் நிலா, என்னோடு வா நிலா. லா..லா என்று முடியும் பாடல் வரிகள்

உன் தேகம் தேக்கிலா, தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா, நான் கைதி கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா, நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் எண்ணிலா, உன் பார்வை தண்ணிலா
தேனூறும் வேர் பலா, உன் சொல்லிலா ஆ ஆ

கல்யாணத் தேனிலா, காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா, என்னோடு வா நிலா


தேயாத வெண்ணிலா, உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக