சனி, 11 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் (பகுதி 3)


இன்று வைகுண்ட ஏகாதசி திருநாள். பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பெருமாளுக்கு உகந்த நாளான சனி கிழமை அன்று வந்துள்ளது. வைணவ தலங்களில் முதன்மையாக கருதப்படும் ஸ்ரீ ரங்கத்தில் மிக சிறப்பாக வழி பாடு செய்ய படும். பல வைணவ தலங்கள் இருந்தாலும், பலரும் ஸ்ரீ ரங்கத்திற்கு சென்று அரங்கனை வழி படுவதை பெருமையாக நினைக்கின்றனர். "வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி" என்று கவிஞர் வாலி மகாநதி படத்தில் சொல்லி இருப்பார். அந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரெங்கனை பற்றி அமர கவிஞர் ரெங்க ராஜன் (வாலி) எழுதிய பாடல் வரிகளை அடியேன் இந்த ரெங்க ராஜன் இங்கே சமர்பிக்கிறேன்.

படம்: மகாநதி
பாடல் : ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாடியவர்: எஸ்.பி.பி & உமா ரமணன்
இசை : இளையராஜா

(கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி நமஸ்தேஸ்து சுகாசரி)


ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

(ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி)

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி


(ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக