திங்கள், 30 டிசம்பர், 2013

நையாண்டி - பகுதி 2


காலையில் டென்சனுடன் ஆபிஸ் கிளம்பும் நேரத்தில், ஒரு ஐந்து நிமிடம் பாடல் இல்ல காமெடி பார்த்து விட்டு சென்றால் சற்று ரிலாக்ஸா இருக்கும். ஒரு நாள் காலை சேனலை மாற்றும் போது...லோட்டஸ் டிவி (பி.ஜே.பி-யின் பிரத்யோக சேனல்)தென்பட்டது, அதில் நித்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவு ஓடிகொண்டிருந்தது. பாத்த மாத்திரமே, வேற சேனலுக்கு மாத்திடேன். அடுத்து ஒரு லோக்கல் சேனலில், "காளை காளை...முரட்டு காளை" (மனிதன்) பாடல் ஓடி கொண்டிருந்தது. 80-களில் வந்த பாடல்களை கேக்கும் போதே, அந்த பாடல் வரிகளை இயல்பாகவே பாட ஆரம்பித்து விடுவோம். அந்த பாட்டில் ரஜினி, ரூபிணி ஒரு பூங்காவில் வைத்து நடனமாடி பாடி கொண்டிருப்பார்கள். அந்த பாடலின் சில வரிகள் கோக்கு மாக்காக இருக்கும்.

ரூபிணி: பொம்பளைய சேராமா போய் சேர்ந்த ஆளுகளை, கட்டையிலே தீ கூட தீண்டாதய்யா.


ரஜினி: சேலைக்குள் தெரியாம சிக்கி விட்ட ஆம்பளைக்கு, சொர்க்கத்தில் இடமேதும் கிடையதம்மா.

இந்த பாட்டில் ரஜினி சொல்வது ஒரு புறம் உண்மையாக இருந்தாலும் கூட  ரூபினி பாடுவது நக்கலாக இருக்கிறது. ஆனால் ரூபினி கூறுவது மட்டும் உண்மையாக இருக்குமேயானால், இங்கு பல சாமியார்களின் கட்டை (இறந்த பிறகு) பத்த வச்ச உடனே சும்மா தக தகவென கொழுந்து விட்டு எரியும்  பேட் பெல்லோஸ்

பிரேமானந்தா-லிருந்து, தற்பொழுது ஆஷ்ரம் பாபு வரை எல்லா சாமியாரும் பொண்ணுக கிட்ட தப்பா நடந்தவங்க. சாமியார பார்த்து என்னய்யா இதுன்னு கேட்ட...நாங்க அவதார புருஷனு சொல்லுவாங்க. அப்படியே செவுள்ளே நாலு அரைய விடனும். எங்க ஏரியா தின்னவேலி-ல சர்ச்சு பாதர் ஒருத்தரு, ஒரு பதினாறு வயசு பொண்ணுகிட்ட தப்ப நடந்து...அந்த பொண்ணு வவுத்ல வளர்ர பிள்ளைக்கு பாதர் ஆகிட்டாரு, அட பாவமே. இந்த "சாமி இல்லேன்னு" சொல்றவங்கள கூட நம்பலாம், ஆனா நான் தான் சாமின்னு சொல்றவனே மட்டும் நம்பாதீங்க.
உங்க மனசாட்சி தாங்க சாமி, "நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியே".

மனசாட்சிக்கு பயந்து நடங்க....அந்த கடவுளே உங்களுக்கு துணை இருப்பாரு.

கொசுறு: மும்பையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நடக்கும். இங்கே சிறப்பா விளையாடுறவங்கள நம்ம இந்திய அணிக்கு தேர்வு செய்வார்கள். பொதுவாக ரஞ்சி கோப்பை போட்டிகள் டிவியில் போட மாட்டாங்க. ஆனால், நம்ம "நித்தி" விளையாடின "ரஞ்சி"கோப்பை கிரிகெட்டை சன் டீவி இரண்டு நாட்கள் ஒளிபரப்பு செய்தனர். ஹலோ மாறன், நித்தியோட பாவம் உங்கள சும்மா விடாது 

செய்தி: ரஞ்சிதா,  நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சந்நியாசம் மேற்கொண்டுள்ளார், மேலும் தன் பெயரை "மா ஆனந்தமாயி" என்று மாற்றியுள்ளார்.  Nithy and Ranji gives message to public that good and bad things will be happening in our life and we don't care about anything

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக