சனி, 7 டிசம்பர், 2013

நையாண்டி (பகுதி 1)

== பருக் அப்துல்லா Vs கணபதி ஐயர் ==

நேற்று மத்திய அமைச்சர் பருக் அப்துல்லா பெண்களை பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திலே அவர் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கோரினர். அவர் கூறிய கருத்து இது தான்: இப்ப இருக்கும் காலத்தில் பெண்களை பெர்சனல் செகரட்டரியாக வைத்து கொள்ள முடியாது. பெண்களிடம் பேசுவதற்கே பயமாக இருக்கிறது.


பருக்-ஜி, பெண்களை உதவியாளராக வைத்து கொள்ளலாம் தப்பில்லை ஆனால் மற்றபடி "வைத்து" கொள்ள கூடாது....அப்படி வைத்திருந்தால் து"வைத்து" விடுவார்கள்

வேணுமென்றால் கணபதி ஐயர் மாதிரி உங்களிடம் பேக்கரி இருந்தால் சொல்லுங்கள், வீரபாகு-விடம் கேட்டு டீலிங் பண்ணிக்கலாம்.

== நாளைய செய்தி  ==

(தேர்தல் முடிவிற்கு ஒரு நாள் முன்பு)

செய்தி: ஏற்காடு இடைதேர்தல் முடிவில் அ.தி.மு.க அதிக வாக்குகள் பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது.

ஜெ: அ.தி.மு.க அரசின் மகத்தான சாதனைக்கு மக்கள் கொடுத்த வெற்றி.

கருணாநிதி : இடைதேர்தல் என்றால், ஆளும் கட்சி ஜெயிப்பது என்பது சகஜம். போன ஆட்சியில் அ.தி.மு.க, பொன்னகரம் இடைதேர்தலில் டெபாசிட் இழந்ததை மறக்க கூடாது.

திருமா/வீரமணி : ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. தேர்தல் சரியான முறையில் நடந்திருந்தால் தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கும்.

மக்கள்: ஹி ஹி ஹி

ரெங்க ராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக