வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதலர் தினம்

நாள் நெருங்கி விட்டது...எப்படியாவது என் காதலை அவளிடம் தெரிவித்து விட வேண்டும். பதிலுக்கு என்ன சொல்லுவா என்று தெரிய வில்லை. காதல் ஒன்றும் எனக்கு புதிதல்ல, ஆடோகிராப் சேரன் மாதிரி இரண்டு மூன்று பெண்களிடம் காதல் வயப்பட்டு பிறகு எல்லாம் ஊற்றி கொண்டது. அதற்கு பிறகு காதலே வேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். காதல் என்றால் தீண்டாமை போல ஒரு பெருங்குற்றம், பாவம் மற்றும் மனித தன்மையற்ற செயல் என்று ஒதுங்கி இருந்தேன். ஆனால் தற்சமயம், காதல் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அந்த பெண்ணை தினமும் சந்திக்கிறேன்..எங்க ஏரியா தான். அந்த பெண்ணை காதலித்தாலும் வாயை திறந்து நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னது கிடையாது. எத்தனை நாள் தான் நடிகர் முரளி மாதிரி காதலை சொல்லாமல் இருப்பது, இந்த காதலர் தினத்தில் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

இன்று காலையில் அவளை பார்த்து எனது விருப்பத்தை சொல்லி விட்டேன். அதற்கு அவளின் ரியாக்சன் என்னவென்றால்....ஸ்ஸ் யப்பா இது என்ன புதுசா இருக்கு, எனக்கு நெறைய வேல கிடக்கு...அடுப்புல சாதம் வச்சுருக்கேன், உங்க அழுக்கு துணிய முக்கி வச்சுருக்கேன் பிறகு துவைக்கணும், இன்னைக்கு வேற வெள்ளி கிழமை (14.02.2014) வீடு வாசல் கழுவி எடுக்கணும். உங்களுக்கு குளிக்க வேற வெந்நீர் போடணும்...இப்ப வேற நீங்க காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதிங்க. ஆபிசுக்கு லேட் ஆகிடுச்சு..போயி சீக்கிரம் கிளம்புங்க ராசா என்று சொல்லி விட்டு ஒரு புன்சிரிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறாள். நான் சொல்ல வேண்டிய காதலை அவள் செயலினால் உணர்த்துகிறாள். பொதுவா மனைவி தான் ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் குழந்தை - இரண்டாம் தாய் - கடைசி காதலி 

புதுசா காதலிக்கிறவங்களுக்கு தான் பாஸ்...வருசத்துக்கு ஒருமுறை காதலர் தினம் வருகிறது, கல்யாணம் ஆனவங்களுக்கு வருசமெல்லாம் காதலர் தினம் தான். ஸோ..லவ் யூ டி மை பொண்டாட்டி.

ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்

வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன், தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக