வெள்ளி, 7 மார்ச், 2014

அப்பா - முதல் கதாநயாகன்:


அப்பா நமக்கு உயிர் கொடுத்தவர். அம்மா இடுப்பில் வைத்து நமக்கு உறவுகளை அறிமுக படுத்தும் போது, அப்பா தன் தோளில் தூக்கி வைத்து நமக்கு உலகினை காட்டியவர். குழந்தை பருவத்தில் நடை பழகி கொடுத்தவர், சிறு வயதில் நீச்சல் கற்று கொடுத்தவர் பிறகு வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிக்க கற்று கொடுத்தவர். பண்டிகை காலத்தில் நமக்கு வித விதமாக துணி மணிகள் எடுத்து கொடுத்து, அவர் பழைய வேஷ்டியை கட்டியவர். சில சமயம் சண்டை போட்டாலும், நாம் தூங்கிய பிறகு பிள்ளை சாப்பிட்டானா என்று விசாரித்து நம்மை வருடி கொடுப்பவர். மகனிடம் தோற்பதை லட்சியமாக கொண்டவர்.

சில குடும்பங்களில் மனைவி இழந்த பிறகு, அப்பா மறுமணம் செய்யாமல் பிள்ளைகளை அடை காக்கும் சேவலாக வாழ்கின்றனர். அப்பா பலருக்கு. ஒரு அன்னையாக, தோழனாக, வழி காட்டியாக இருப்பவர். நமது படிப்பு, வேலை மற்றும் திருமணத்திற்காக (குறிப்பாக மகளின் திருமணம்) பல இன்னல்களை சந்தித்து நம்மை சிகரத்தில் வைத்தவர். அப்பாவின் மறைவிற்கு பிறகு, எத்தனை பேர் நானிருக்கிறேன்...பார்த்து கொள்வேன் என்று சொன்னாலும், அப்பாவிற்கு ஈடாகுமா????

ஒரு விவாசாயியாக, நெசவாளியாக, கூலி தொழிலாளியாக, மெக்கானிக்காக, டிரைவராக, வாட்ச்மேனாக, ஆசிரியாராக, குமாஸ்தாவாக, மேலாளராக என்று எதாவது ஒரு வேலை பார்த்து நமது குடும்பத்திற்காக அயாரது உழைப்பவர். குடும்ப பாரம் என்ற சிலுவைகளை இவர் சுமந்து நமது சிரமத்தை போக்கியவர். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக....தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பாவம், இந்த அப்பாவி(ன்) வாழ்க்கை.

தகப்பன்கள் சிலுவைகளில் அறைய படாத கர்த்தர்களாக வாழ்கின்றனர். லவ் யூ பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக